சகல மதங்களுக்கும் ஒரு அமைச்சை உருவாக்குங்கள் -பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

பௌத்தம், இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என ஒவ்வொரு மதங்களுக்கும் ஒவ்வொரு அமைச்சை கொண்டு நடத்துவதை விட , முன்னரைப் போலவே சகல மதங்களுக்கும் ஒரே அமைச்சை உருவாக்குமாறு, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் மதங்களின் பெயரிலோ அல்லது இனங்களின் பெயர்களுடனான அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொரலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போ​தே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகளின் பிரதேச மட்ட தலைவர்கள் தொடர்புபட்டுள்ளதாகவும், எனவே தம்முடைய அடியாட்களை கட்டுபடுத்துமாறும் அரசியல் கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -