ஊரடங்குச் சட்டத்தை மீறிய 60 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

டமேல் மாகாணத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிச்செயற்பட்டமை குறித்து 60 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடமேல் மாணத்தில் கைது செய்யப்பட்ட 60 பேரில் சிலரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடி​க்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், அதுவரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், வடமேல் மாகாணத்தின் பாதுகாப்பு கருதி, பொலிஸ் குழுவினர் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டு வருவதாகவும், அதன்படி பிரதி ​​பொலிஸ்மா அதிபர்கள் இருவரும், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உதவி பொலிஸார் எட்டு பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அத்துடன் கொழும்பு மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு நவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -