நாங்கள் எந்தக் கட்சியுடனும் பேசத்தாயார் - எம்.எஸ்.உதுமாலெவ்வை அறிவிப்பு

றியாத் ஏ.மஜீத்-
நாங்கள் யாருடனும், எந்தக் கட்சியுடனும் பேசத் தாயார். இன்றிலிருந்து நாங்கள் சுயாதீனமான குழுவாகஇயங்கவுள்ளோம் என முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸிலிருந்து நான் விலகியதைத் தொடர்ந்து என்னை நம்பி கட்சியின் ஏனைய பிரதேசங்களின்உயர்பீட உறுப்பினர்கள் அமைப்பாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், வட்டார குழு உறுப்பினர்கள் எல்லோரும்இன்று தேசிய காங்கிரஸிலிருந்து விலகியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

கட்சி என்பது மார்க்கமல்ல, அது காலத்தின் தேவை என்ற தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ்வின்கொள்கையில் வளர்ந்த நாங்கள் அதனடிப்படையிலேயே இன்று கட்சி விலகியுள்ளோம் எனவும் உதுமாலெவ்வைதெரிவித்தார்.
அதாவுல்லாஹ் என்றால் உதுமாலெவ்வை, உதுமாலெவ்வை என்றால் அதாவுல்லாஹ் என்ற விசுவாசம் இன்றுதடம் மாறியுள்ளது. புகைச்சலுக்குள் இருந்தாலும் எரிச்சலுக்குள் இருக்க முடியாமலே கட்சியிலிருந்துவிலகினேன் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் ஏன் பாராளுமன்றத் தேர்தல் கூடவரவிருக்கின்றது. இந்நிலையில் நாங்கள் நிதானமாக எந்தக் கட்சியுடனும் பேசவுள்ளோம் எனவும் முன்னாள்கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை மேலும் தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெவ்வை விலகியதைத் தொடர்ந்து கட்சியின் ஏனைய பிரதேசங்களின்உயர்பீட உறுப்பினர்கள் அமைப்பாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் எல்லோரும் தேசிய காங்கிரஸிலிருந்துவிலகும் நிகழ்வு இன்று (17) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் கலாச்சாரமண்டபத்தில் இடம் பெற்றது. இதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு முன்னாள் கிழக்கு மாகாணஅமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் முன்னாள் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி பஹீச், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.ஜௌபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -