மத்திய முகாம் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் விடுதி பைசல் காசிமால் திறந்து வைப்பு


சுகாதார, போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் 35 மில்லியன் ரூபா செலவில் மத்தியமுகாம் வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆண், பெண் மருத்துவ விடுதி தொகுதியை திறந்து மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இம்மாதம் 18ஆம் திகதி இடம்பெற்றது.
சுகாதார இராஜங்க அமைச்சர் எம்.சீ.பைசல் காசீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதைத் திறந்து மக்களின் பாவனைக்குக் கையளித்தார்.

மத்தியமுகாம் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.எல்.பீ.நுவான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உதவி தவிசாளர் ஏ.கே.அப்துல் சமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.வீ.நவாஸ், நாவிதன்வெளி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, மத்தியமுகாம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜயசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.சீ.நிஸார், நாவிதன்வெளி பிரதேச உள்ளிட்ட உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பின்தங்கிய பிரதேசத்தில் வாழும் மக்களின் சுகாதார சேவையை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தினை பாராட்டி பைசல் காசிம் மத்தியமுகாம் பிரதேச மக்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -