அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதியொதுக்கீட்டில் மாத்தளை - டோல வீதி காபட் இட்டு புனரமைக்கப்பட்டது

டீ.எம்.ஸவாஹிர்-
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாத்தளை மா நகர சபை உறுப்பினர் சபருல்லாஹ் மற்றும் அமைப்பாளர் ஐயூப் ஆகியோரின் வேண்டுகோளின் படி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் ரூபா 26 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மாத்தளை - டோல வீதி காபட் இட்டு புனரமைக்கப்பட்டது.
இவ் வீதியானது பல வருடங்களாக செப்பனிடப்படாது குன்றும், குழியுமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக வீதியைப் பயன்படுத்துபவர்கள் நீண்ட காலமாக பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளான நிலையிலேயே, தற்போது இது காபட் வீதியாக மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதேச மக்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -