வியாழேந்திரன் பதவிக்கு ஆப்பு?


புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விரைவில் விலக்கப்படுவார்.
அவர், இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினராக தொடரமுடியாது. அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கநேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.
விலைபோன வியாழேந்திரனை நீங்கள் கட்சியில் இணைத்துக்கொள்வீர்களா என இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த சுமந்திரனிடம், ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், ‘விலை போன ஒருவர் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லையென சுமந்திரன் பதிலளித்த நிலையிலேயே, அக்கேள்விக்கு, கட்சியின்; தலைவரான சம்பந்தன், பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -