மாகாண விளையாட்டு துறை திணைக்கள மாகாண பணிப்பாளராக என்.எம். நௌபீஸ் கிழக்கு ஆளுனரால் நியமனம்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிழக்கு மாகாண விளையாட்டுத் துறை திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நூர்தீன் முஹம்மட் நௌபீஸ் நேற்று புதன் கிழமை (10) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளுனரின் செயலகத்தில் வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டது.
இலங்கை நிருவாக சேவையை சேர்ந்த இவர் பதவி உயர்வு பெற்று இந்த நியமனத்தை ஆளுனர் வழங்கியுள்ளார்.
முன்னால் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர், கிராமிய கைத்தொழில் உற்பத்தி திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் , கிண்ணியா நகர சபையின் செயலாளர் போன்ற பதவிகளையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறாவூறை பிறப்பிடமாகக் கொண்ட இவர் நூர்தீன் மற்றும் எம்.டி.அஸீஸா ஆகியோரின் புதல்வருமாவார்.
நியமனம் வழங்களின் போது கிழக்கு மாகாண உள்ளூராட்சி மற்றும் முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்தன போன்றோர்களும் பங்கேற்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -