"சாட்சியங்கள்" நூல் வெளியீட்டு நிகழ்வு.

எம்.பஹ்த் ஜுனைட்-
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் அவர்கள் எழுதிய "சாட்சியங்கள்" நூல் வெளியீட்டு நிகழ்வு 12.10.2018 வெள்ளிக்கிழமை பி.ப 3:30 மணிக்கு காத்தான்குடி பீச்வே ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வுக்கு காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் மெளலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) தலைமை தாங்குவதுடன் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் முஸ்லிம் கவுன்சில் ஒப் சிறிலங்கா வின் தலைவருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் என்.எம்.அமீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அத்துடன் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஊர் பிரமுகர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், சமூக தலைவர்கள் என பல் துறை சாராரும் கலந்து கொள்ளவுள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -