மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகர சபைகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள இலங்கை காணி மீட்பு அதிகார சபையின் (எல்.ஆர்.ரீ.சி) உடனும் சீனா நாட்டில் உள்ள ‘ஹவா-தை சங் கேங் பாதுகாப்பு தொழில் நுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்று நேற்று (16) அமைச்சா் பாட்டலி சம்பிக்க ரணவனக்க முன்னிலையில் பத்தரமுல்லையில் கைச்சாத்திடப்பட்டது.
இந்த நிறுவனத்தின் ஊடாக கொழும்பு துறைமுக நகரம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நிர்மாணங்கள் உள்ள பிரதேசங்களில் பாதுகாப்பு மற்றும் தெ்ாழில் நுடபம் போன்ற வற்றினை காணி மீட்பு அபிவிருத்தி அதிகார சபையின் பாதுகாப்புப் பிரிவின் சேவைகளை செயற்படுத்தப்படவுள்ளது. இதற்காக சீன கம்பனி இத்துறையில் உள்ள பாதுகாப்பு உத்தியோகத்தா்கள் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தா்களுக்கு விசேட பயிற்சிகளையும் வழங்க உள்ளது. அத்துடன் சீன அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் சகல கட்டுமாணங்களுக்கும் இந் நிறுவனத்தின் பாதுகாப்புப் கடமைகளைப் பெற்றுக் கொள்வாா்கள். இதன் மூலம் சட்ட விரேத நிர்மாணம், காணி மீட்பு , நிர்மாணங்களை பரிசிலிப்பதற்கும் இந் நிறுவனம் செயற்பட உள்ளது.