மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகர சபைகள் அபிவிருத்தி அமைச்சு சீன நிறுவனத்துடன் கைச்சாத்து

அஷ்ரப் ஏ சமத்-
மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகர சபைகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள இலங்கை காணி மீட்பு அதிகார சபையின் (எல்.ஆர்.ரீ.சி) உடனும் சீனா நாட்டில் உள்ள ‘ஹவா-தை சங் கேங் பாதுகாப்பு தொழில் நுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்று நேற்று (16) அமைச்சா் பாட்டலி சம்பிக்க ரணவனக்க முன்னிலையில் பத்தரமுல்லையில் கைச்சாத்திடப்பட்டது.

இந்த நிறுவனத்தின் ஊடாக கொழும்பு துறைமுக நகரம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நிர்மாணங்கள் உள்ள பிரதேசங்களில் பாதுகாப்பு மற்றும் தெ்ாழில் நுடபம் போன்ற வற்றினை காணி மீட்பு அபிவிருத்தி அதிகார சபையின் பாதுகாப்புப் பிரிவின் சேவைகளை செயற்படுத்தப்படவுள்ளது. இதற்காக சீன கம்பனி இத்துறையில் உள்ள பாதுகாப்பு உத்தியோகத்தா்கள் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தா்களுக்கு விசேட பயிற்சிகளையும் வழங்க உள்ளது. அத்துடன் சீன அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் சகல கட்டுமாணங்களுக்கும் இந் நிறுவனத்தின் பாதுகாப்புப் கடமைகளைப் பெற்றுக் கொள்வாா்கள். இதன் மூலம் சட்ட விரேத நிர்மாணம், காணி மீட்பு , நிர்மாணங்களை பரிசிலிப்பதற்கும் இந் நிறுவனம் செயற்பட உள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -