கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பிற்கு விருது

ல்முனை KDMC நெனசலயின் 9 வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் கல்முனை ஆசாத் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.மேற்படி நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இன் நிகழ்வில் குறுகிய காலத்தில் கல்முனை நகரில் சிறப்பாக சேவையாற்றி வரும் சிவில் சமூக அமைப்பாகவும் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்று சமூகத்துக்கு தொண்டாற்றும் நிறுவனமாகவும் அடையாளம் காணப்பட்டு KDMC நெனசல நிறுவனத்தினால் அதற்கான விருது கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மேற்படி விருதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், KDMC நெனசல நிறுவனத்தின் பணிப்பாளர் சீனி முஹம்மது ஹாஜா கான் ஆகியோர் இணைந்து வழங்கி கௌரவித்தனர். இவ் விருதினை கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக உபதலைவர் அல்ஹாஜ். எஸ்.அப்துல் சமத் பெற்றுக்கொண்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -