வருடாந்த பொலிஸ் அணிவகுப்பு

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மொறவெவ பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இன்று (31) காலை பொலிஸ் பொறுப்பதிகாரி நிஹால் குலதுங்க தலைமையில் நடைபெற்றது.

மொறவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற அறுபதுக்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

பொலிஸ் அணிவகுப்பின் போது பொலிஸாரின் சீருடைகள் மற்றும் உடற்பயிற்சிகள் மற்றும் பொலிஸார் தங்கியிருக்கும் அறைகள் பரிசோதிக்கப்பட்டதுடன் சமையல் அறை மற்றும் பாவிக்கும் கிணறுகள் போன்றவையும் சோதனையிடப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

இந்த அணிவகுப்பு மரியாதையை கன்தளாய் பிரதேசத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ஹேமசிறி மற்றும் கமல் ரணவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -