கொழும்பும் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றியமும், தமிழ்நாடு இனிய நந்தவனம் சஞ்சிகை இணைந்து நடத்தும் '' சமகால தமிழ் இலக்கியமும் நோக்கும் போக்கும்'' கருத்தரங்கு

கொழும்பும் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றியமும், தமிழ்நாடு இனிய நந்தவனம் சஞ்சிகை இணைந்து நடத்தும் '' சமகால தமிழ் இலக்கியமும் நோக்கும் போக்கும்'' எனும் மகுடத்திலான கருத்தரங்கு எதிர்வரும் 24.06.2018 அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.
இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் நடைபெறும் இக்கருத்தரங்குக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க தலைவர் தம்பு சிவா அவர்கள் தலைமை வகிப்பார்.

என்,கே, ரகுநாதன் அரங்கில் நடைபெறும் இக்கருத்தரங்கில் செல்வி அம்ரிதா கேதீஸ்வரன் தமிழ் வாழ்த்தினை வழங்குவார். வரவேற்புரை ஆழ்வார் கந்தாமி வழங்குவார்.

தொடக்கவுரையை தமிழ்நாடு இனிய நந்தவனம் சந்திரசேகரனும், வாழ்த்துரையை தமிழ் நாடு நீதியரசர் T.N.வள்ளிநாயகமமும் வழங்குவார்கள்.
என்.கே. ரகுந தன் அரங்காக இடம்பெறும் கருத்தரங்குக்கு சாம் ஆசிரியர் வைத்தியகலாநிதி தி.ஞானசேகரன் தலைமை வகிப்பார்.
சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப், மேமன்கவி, தமிழ்நாடு பெ. சிதம்பரநாதன், பாரதி இராஜநாயகம் ஆகியோர் கருத்துரைகள் வழங்குவார்கள்.

இனிய நந்தவனம் சந்திரசேகரன் எழுதிய '' நான் கண்ட அந்தமான் ''' நூலும் வெளியிடப்படும்.
நிறைவுரையை தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் என் நல்லுசாமி வழங்குவார்.

நன்றியுரையை கே. பொன்னுத்துரை முன் வைப்பார்.

நிகழ்ச்சிகளை ஜீவா சதாசிவம் தொகுத்து வழங்குவார்.

கலை நிகழ்ச்சிகளாக ஸ்ரீமதி மலர்க்கொடி விஜயராகவன், செல்வி சரண்யா விஜயராகவன், செல்வன் T.துரை மனோகரன், ஸ்ரீமதி ப்ரியா பிரசாத், ஸ்ரீமதி லக்ஷ்மி திருமாறன் ஆகியோர் கலந்துக் கொள்ளும் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
இறுதியாக, தமிழ்நாடு சென்னை ஸ்ரீ ஹரி அபிநய கிருஷ்சா பரத நாட்டிய
இசைப்பள்ளி மாணவர்களான ஸ்ரீமதி மலர்க்கொடி விஜயராகவன், செல்வி சரண்யா விஜயராகவன், செல்வி சந்தியா, செல்வி ரூபிகா ஆகியோர் கலந்துக் கொள்ளும் இசை நாட்டிய நிகழ்வும் இடம் பெறும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -