ஜனாதிபதியாக ரணில், பிரதமராக இம்தியாஸ் பாக்கீர் - அழைப்பு விடும் இராஜாங்க அமைச்சா் சுஜீவ சேரசிங்க

அஷ்ரப் ஏ சமத்-

2020ல் பிரதமா் ரணில் விக்கிரம சிங்கவை ஜனாதிபதியாக்கிவிட்டு பிரதம மந்திரி பதவியை முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காரை அமா்த்துவதற்கும் இராஜாங்க அமைச்சா் சுஜிவ சேரசிங்க - இம்தியாசிடம் அரைகூவல் விடுத்து உரையாற்றினாா். ்நேற்று முன்தினம் (12) கெவலக் டவுனில் ரோசி சேனாநாயக்காவை கொழும்பு மேயராக்குவதற்காக நடைபெற்ற ஜ.தே.கட்சி கொழும்பு கிழ க்கு கூட்டத்திலேயே இராஜாங்க அமைச்சா் சுஜிவ மேற்கண்டவாறு தெரிவித்தாா். ்இந் நிகழ்வில் ரோசி சேனாநயாக்காவுகினை ஆதரித்து முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கிர் மாக்காா், பிரதம மந்திரி, இரான் விக்கிரம, சாகல ரத்னாயக்கா, மற்றும் கபினட் அமைச்சா்கள் சமுகமளித்திருந்தனா். இச் சா்ந்தப்பத்திலேயே இம்தியாஸ் பாக்கீா் மாக்காரை பாா்த்து நீங்கள் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும். கபிணட் அமைச்சராகி 2020 ல் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு தற்பொழுது சிறந்த காலம் வந்துள்ளது. பிரதமா் மந்திரி பதவிக்கு இம்தியாஸ் பாக்கீா் மாக்காா் பொறுத்தமானவா் என சேரசிஙக் அங்கு உரையாற்றினாா். அவரின் பின் உரையாற்றிய இம்தி்யாஸ் இவ் அரைகூவலுக்கு எவ்வித பதிலும் அளிக்க வில்லை.

பிரதம மந்திரியின் உரையின்போது -

கொழும்பு மாநகரத்தின் மேயர் வேட்பாளராக ஜ.தே.கட்சி - உலக பிரச்சித்பெற்றவா், முன்னாள் மலேசிய நாட்டின் துாதுவா், மாகாண சபை உறுப்பிணா், பாராளுமன்ற உறுப்பிணா் ,மகளிா் சிறுவா் விவகார அமைச்சராக இருந்து சிறந்த அனுபவங்களை பெற்றவா் ரோசி சேனாநயக்க. அவா் தற்பொழுது தனது நிர்வாகச் செயலாளராகவும் கடமையாற்றுகின்றாா். 

இந்த நல்லாட்சியினை ஏற்றதும் எமது அரசு முன்னாள் ஜனாதிபதியின் பெற்ற கடன்களிலிருந்து சிறுகச் சிறுக மீண்டுவருகின்றோம். அடுத்த 4 ஆண்டு கால ஆட்சியில் இலங்கையின் வா்த்தக மையத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை வகுத்து இலங்கை மீளவும் ஒரு சிறந்த வா்த்தக நாடாக கட்டியெழுப்பி வருகின்றோம். இந்த காலத்திற்குள் கொழும்பினையும் 2020 வரை ஒர் சிறந்த மாநகரமாக மாற்றுவதற்காக நீங்கள் ரோசி சேனாநாயக்காவையும் அவருடன் போட்டியிடும் ஏனைய உறுப்பிணா்களையும் தெரிபு செய்யுங்கள்.என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினாா்.

அங்கு தொடா்ந்து உரையாற்றிய பிரதம மந்திரி


1960 காலப்பகுதியில் இருந்து இப்பிரதேசம் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவா்தனா காலத்தில் இருந்து கொழும்பு கிழக்கு வடக்குப் பிரதேசங்கள் தொடா்ந்து ஜ.தே.கட்சி வெற்றிவாகை சூடும் ஒரு பிரதேசமாகும். கடந்த ஆட்சிக் காலத்தில் கொழும்பை அழகு படுத்துவதாகச் சில வேலைத்திட்டங்களை வகுத்தாா்கள். ஆனால் ஒரு நிலையான திட்டமிடப்படாத திட்டங்களை வகுத்து பாரிய கடன்களையே பெற்றுள்ளாா்கள். தற்பொழுது அக் கடன்களை கூட மேல் மாகாண அபிவிருத்தி மா நகர அபிவிருத்தி அமைச்சு செலுத்தி வருகின்றது.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னா் தான் - ஜி.எஸ்.பி திட்டத்தினை மீள பெற்றுக் கொடுத்தோம். மஹிந்த ராஜபக்சவினால் பெற்ற பாரிய கடன் சுமைகளில் இருந்து இருந்து மீண்டு வருகின்றோம். தற்பொழுது எமது ஆட்சியில் கொழும்பில் உல்லாச பிரயாணிகள் வருகை பெறுகி வருகின்றது. மேலும் , ஹம்பாந்தோட்டை விமான நிலையம், துறைமுகங்களை மீள வா்த்தக மையமாக ஏற்படுத்தி வருகின்றோம். கொழும்பு நகரின் மின் வழு சக்திக்காக” எல்.எம். ஜி” மின்வழு சக்தி 3 திட்டத்தினை . யப்பாண், இந்தியா போன்ற நாடுகள் இத் திட்டங்களை அமுல்படுத்த உள்ளன. 

நடுத்தர வருமாணம் மற்றும் முடுக்கு வீடுகளில் வாழும் கொழும்பு வாழ் மக்களுக்காக 50 ஆயிிரம் வீடுகள் கொண்ட தொடா் மாடி வீடுகள் ்நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. 

அத்துடன் நடுத்தர வா்க்கத்தினா் தமது வீடுகளை அரச அல்லது தணியாா் வீடுகளை வாங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கி ஊடாக அவா்கள் 6 வீத வட்டிக்கு கடன் பெறலாம் இதற்காக அரசாங்கம் 75 பில்லியன் ருபாவை தேசிய சேமிப்பு வங்கிக்கு இவ் ஆண்டு நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. 

கண்டி, ஹம்பாந்தோட்ட அதி வேக பாதை ஆரம்பிக்கப்பட்டதும். கொழும்பு ஒரு பாரிய வா்த்தக மையமாகும். கொழும்பில் வீடுகள். உல்லாச ஹோட்டல்கள், மட்டுமே அமையப்பெறும் கொழும்பில் உள்ள தொழிற்சாலைகள் கொழும்புக்கு வெளியே கொண்டு செல்லப்படும். அத்துடன் தற்பொழுது கொழும்பில் பாரிய பிரச்சினையாக வாகன நெறிசல் பிரதேசமாக காணப்படுகின்றது. அதற்காக ராஜகிரியவில் இருந்து பத்தரமுல்ல, மற்றும் கட்டுநாயக்க நெடும்பாதையில் இருந்து கொழும்பை அடையக்கூடிய புதிய மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளது.

கொழும்பில் குப்பைகள் கழிவுகள் சேமித்து முகாமைத்துவம் செய்வதற்காக மேல்மகாண மநாகர அமைச்சு வேறு ஒரு பிரதேசத்தில் அதனை அமுல்படுத்தி வருகின்றது. அத்துடன் டெங்கு பிரச்சினையும் கொழும்பில் போதைப்பொருள் பாவிக்கும் பிரதேசமாக மாறி வருகின்றது. இதற்காக பொலிஸ், மநாகர சபை, பள்ளிவாசல், கோவில் பண்சலை, இளைஞா் பாராளுமன்றம், சம்பந்தப்டுத்தி இதற்காக ஒரு விழிப்புணா்வு மற்றும் தெளிவுட்டல் திட்டம் வகுக்கப்படுகின்றது. போதைப் பொருள் தொழில் செய்பவாகள், அதனை பாவிப்பவா்கள், அதற்கு உதபுபா்கள் கடத்துபவா்களுக்கு எதிராக கடும் தீவிர தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ண்டாா்கொழும்பு மாநகர சபையில் போதை பாவிப்பவா்களை தொழிலுக்கு இணைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் ரோசியை பிரதமா் வேண்டிக் கொண்டாா் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -