சமூகத்தின் ஒற்றுமை சீர்குலைக்கும் சதிகாரர்களையிட்டு கவனமாக இருங்கள்.

ஊடகப்பிரிவு-

இறம்பைக்குளத்தில் எம்.பி.மஸ்தான் காதர். 

ன்று இனவாதத்தை கையிலெடுத்து தமது அரசியலை கொண்டு செல்வதற்கு சிலர் புறப்பட்டிருக்கிறார்கள்,அவர்களையிட்டு மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ மஸ்தான் காதர் தெரிவித்தார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு மகாஇறம்பைக்குளத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும்இ. டட்லி ஆசிரியர் செல்வராஜா கிருபாகரன் மற்றும் திருவியாவதனி ஜெயபிரதாப் ஆகியோரை ஆதரித்து இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது இத்தேர்தலில் போட்டியிடும் எமது கட்சியின் வேட்பாளர்களை நீங்கள் அறிவீர்கள்.
இவர்களிடம் இருந்து நல்ல சேவைகள் இந்தப் பிரதேசத்திற்கு கிடைக்க வேண்டுமானால் இந்தத் தேர்தலில் அதற்கான ஆணையை வழங்கி அவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும்.
அதன் மூலம் எமது மேலதிகமான செல்வாக்கினை பயன்படுத்தி அரிய பல அபிவிருத்திகளை இந்தப் பிரதேசங்களில் செய்ய முடியும்.

ஆகையால் உங்களது வாக்குகளை வீணாக்காமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் எமது வேட்பாளர்களுக்கு நீங்கள் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் மகாஇறம்பைக்குளம் பகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -