பாறுக் ஷிஹான்-
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 44 ஆவது நினைவுதினம்
இன்று(10) காலை யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், , கஜதீபன், நாடாளுமன்ற உறுப்பினா் சித்தாா்தன், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனா்.
1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில்
ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.
இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்கள்
மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டுள்ளது.



