SLMC யின் அம்பாரை மாவட்ட பொருளாளர் எஹியாகான் SLFP யில் இணைவு..!

அனாம்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாரை மாவட்டப் பொருளாளராக இருக்கும் ஏ.சி.எஹியாகான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சாய்ந்தமருதுக்கான அமைப்பாளர் கேட்டு இன்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.

இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினராகவும் அம்பாரை மாவட்டப் பொருளாளராகவும் இருக்கும் நிலையில் கட்சியுடன் கொண்ட அதிருப்தி காரமாகவும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற பிரச்சனைகள் காரணமாகவும் பள்ளிவாயல் நிருவாகம் எடுத்த முடிவுக்கேற்ப எந்த கட்சியும் இம்முறை அங்கு தேர்தலில் போட்டியிடமுடியாது என்பதனாலும் ஸ்ரீ.சு.கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.


குறித்த செய்தி தொடர்பாக இம்போட்மிரர் செய்திப் பிரிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஏ.சி.எஹியாகானைத் தொடர்பு கொண்டு கேட்டபோது:

நான் இன்று ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றது உண்மை. ஆனால் நானாகச் செல்லவில்லை எனக்கு அழைப்பு வந்தது ஜனாதிபதியின் செயலகத்துக்கு வருமாறு அதனால் அங்கு நான் சென்றிருந்தேன்.

அங்கு அமைச்சர் பைஷர் முஸ்தபா பலரும் இருந்தனர். உங்களை  சாய்ந்தமருதுக்கான பிரதம அமைப்பாளராக நியமிக்க திட்டமிட்டுள்ளோம் நீங்கள் ஆயத்தமா என்று கேட்டார்கள் ஆனால் நான் வேறு கட்சியில் முக்கிய பதவியில் இருப்பதால் என்னால் இப்போதைக்கு முடியாது.

ஆனால் இரண்டு நாட்களின் பின்னர் முடிவு சொல்கிறேன் என்று கூறிவிட்டு திரும்பினேன் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -