இவ்வருட தேசிய மீலாத் விழா தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவிக்கின்றார்.
அரசாங்கம் இவ்வருட தேசிய மீலாத் விழாவை அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் நடாத்த திடட்டமிட்டு அதன்படி எதிர் வரும் 18ஆம் திகதி நடாத்த சகல ஏற்பாடுகளையும் திணைக்களமும், ஏற்பாட்டுக் குழுவினரும் மேற்கொண்டு வரும் நிலையில் அது மறு அறிவித்தல் வரும் வரை பிற்போடப்பட்டுன்னதாக பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.
மீலாத் விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பிக்க இருந்த நிலையிலேயே மறு அறிவித்தல் வரை விழா பிற்போடப்பட்டுள்ளது. என்றாலும் மீலாத் விழாவுக்கான சகல வேலைகளும் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.