ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
கடந்த ஏழு வருடங்களாக கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச சபையில் செயலாளராக கடமையாற்றி அண்மையில் இட மாற்றம் செய்யப்பட்ட சி.சி.ஷிஹாப்தீன் என அழைக்கப்படும் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் ஷிஹாப்தீன் கல்குடா பிரதேசத்தில் விரல் விட்டு எண்ண முடியாதளவிற்கு கூட அவர் முதன்மையானவர் என்பதனை அவருக்கு கீழ் கடமையாற்றிய முஸ்லிம் நிருவாக உத்தியோகத்தர்கள் அவருடைய இட மாற்றத்தினை மையப்படுத்தி நடாத்திய பிரியா விடை நிகழ்வு எடுத்து காட்டும் விடயாமாக அமைந்திருந்தது.
நேற்று 10.12.2017 ஓட்டமாவடி – மாஞ்சோலை லெப்பைதம்பி சிறுவர் பூங்காவில் இடம் பெற்ற குறித்த பிரியாவிடை வைபவத்தில் சமூக ஆர்வலரும் பிரதி அமைச்சர் அமீர் அலியின் தீவிர அரசியல் செயற்பாட்டாளருமான சாட்டோ மன்சூர் மற்றும் முன்னாள் வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் அல்பத்தாஹ் ஆகியோர் ஷிஹாப்தீனை பற்றி உரையாற்றுகையில்….
மீராவோடை மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியினை தொடர்ந்த ஷிஹாப்தீன் 1982ம் ஆண்டு தேசியத்தில் பேசப்படும் முக்கிய பாடசாலையான கல்முனை சாஹிறா தேசிய பாடசலையில் தனது உயர் தர கல்வியினை பூர்த்தி செய்து 1991ம் ஆண்டு கல்குடா கல்வி கல்வி வலயத்தில் பிரதான எழுது வினைஞராக கடமையினை பொறுப்பேற்றார்.
பிரதான எழுது வினைஞராக கடமையாற்றிய ஷிஹாப்தீனை எல்லோரும் சி.சி.ஷிஹாப்தீன் என செல்லமாக அழைக்க தொடங்கினர். அப்பொழுது கல்குடா பிரதேசத்தில் முக்கிய கல்வி மானாகவும், எல்லோராலும் மதிக்கப்பட கூடிய முக்கிய பாத்திரத்தினை வகித்த ஷிஹாப்தீன் பிரதேசத்தின் ஒற்றுமைக்காவும், அரசியல் மேம்பாட்டுக்காவும் கல்குடா அரசியல் தலைமைகளோடும், மாவட்ட அரசியல் தலைமைகளோடும் ஒருமித்து ஒற்றுமையுடம் செயலாற்ற தொடங்கினார்.
மும் மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற ஷிஹாப்தீனை 2008ம் ஆண்டு இடம் பெற்ற மாகாண சபை தேர்தலில் களமிறக்குமாறு ஒட்டுமொத்த பிரதேச சபை உறுப்பினர்களும், பிரதேசத்தின் முக்கிய அரசியல் செயற்பாட்டாளர்களும் கல்குடாவின் அரசியல் தலைமையாக இருக்கின்ற அமீர் அலியிடம் வேண்டிக்கொண்டும் இறுதியில் ஜவாஹிர்சாலியை மாகாண சபை வேட்பாளராக அமீர் அமீர் களமிரக்கியும் பிரதேசத்தின் நன்மை கருதி ஜாவாஹிர் சாலியின் வெற்றிக்காக ஷிஹாப்தீன் உழைத்து அவரை மாகாண சபை உறுப்பினராக்கினார்.
பிரதான எழுது வினைஞராக கடமையாற்றிய ஷிஹாப்தீனை எல்லோரும் சி.சி.ஷிஹாப்தீன் என செல்லமாக அழைக்க தொடங்கினர். அப்பொழுது கல்குடா பிரதேசத்தில் முக்கிய கல்வி மானாகவும், எல்லோராலும் மதிக்கப்பட கூடிய முக்கிய பாத்திரத்தினை வகித்த ஷிஹாப்தீன் பிரதேசத்தின் ஒற்றுமைக்காவும், அரசியல் மேம்பாட்டுக்காவும் கல்குடா அரசியல் தலைமைகளோடும், மாவட்ட அரசியல் தலைமைகளோடும் ஒருமித்து ஒற்றுமையுடம் செயலாற்ற தொடங்கினார்.
மும் மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற ஷிஹாப்தீனை 2008ம் ஆண்டு இடம் பெற்ற மாகாண சபை தேர்தலில் களமிறக்குமாறு ஒட்டுமொத்த பிரதேச சபை உறுப்பினர்களும், பிரதேசத்தின் முக்கிய அரசியல் செயற்பாட்டாளர்களும் கல்குடாவின் அரசியல் தலைமையாக இருக்கின்ற அமீர் அலியிடம் வேண்டிக்கொண்டும் இறுதியில் ஜவாஹிர்சாலியை மாகாண சபை வேட்பாளராக அமீர் அமீர் களமிரக்கியும் பிரதேசத்தின் நன்மை கருதி ஜாவாஹிர் சாலியின் வெற்றிக்காக ஷிஹாப்தீன் உழைத்து அவரை மாகாண சபை உறுப்பினராக்கினார்.
அதற்கு பிற்பாடு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த சுபைரின் அமைச்சின் கீழ் அமீர் அலியினால் ஷிஹாப்தீனுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டும் லெப்பை ஹாஜி என்பவரை திருப்தி படுத்துவதற்காக ஷிஹாப்தீனுக்கு வழங்கப்பட்ட வேலை வாய்ப்பு திட்டமிடப்பட்டு பறிக்கப்பட்டு அவர் தகப்பன் இல்லாத பிள்ளையாக விடப்பட்ட வரலாற்றினை கல்குடா சமூகத்தினால் ஒரு போதும் மறந்து விட முடியாது.
அதற்கு பிற்பாடு முதலமைச்சரை நோக்கிய பயண்ம் என பிரதி அமைச்சர் அமீர் அலி கிழக்கு மாகாண சபையில் போட்டியிட்டதனை போன்று 2011ம் ஆண்டு மீண்டும் பிரதி அமைச்சர் ஆமீர் அலி ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் தவிசாளரை நோக்கிய வேட்பாளர் என அவருக்கு ஆசை வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும் கொடுத்து இறுதியில் இராஜதந்திர ரீதியில் அவரை ஏமாற்றி தோல்வியடைய செய்து நடுக்கடலில் விட்ட சம்பவம் ஷிஹாப்தீனின் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத வடுவாக இருந்து வருகின்றது.
ஒரு சிறந்த ஆளுமைமிக்க கல்குடாவின் கல்விமானாக இருக்கின்ற ஷிஹாப்தீனை மனிதர்கள் கைவிட்டாலும் படைத்த இறைவன் கைவிடமாட்டான் என்ற அடிப்படையில் முன்னாள் முதலமைச்சராக இருந்த சிவனேசதுறை சந்தரகாந்தனின் (பிள்ளையான்) முயற்சியினால் கோறளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச சபைக்கு 2012ம் ஆண்டு செயலாளராக ஷிஹாப்தீன் பதவியில் அமர்த்தப்படுகின்றார்.
வரலாற்றில் வாழைச்சேனை பிரதேச சபையில் இது வரைக்கும் முஸ்லிம் செயலாளர் ஒருவர் கடமையாற்றிராத நிலையில் தொடர்ந்து ஏழு வருடங்கள் ஷிஹாப்தீன் குறித்த பிரதேச சபையில் செயலாளராக கடமையாற்றி தமிழ் சமூகத்தின் மனங்களை வென்றிருப்பதானது அவருடைய சமநிலையான நிருவாக திறமையினை வெளிச்சம் போட்டுக்காட்டும் விடயமாக உள்ளது.
அதற்கு பிற்பாடு முதலமைச்சரை நோக்கிய பயண்ம் என பிரதி அமைச்சர் அமீர் அலி கிழக்கு மாகாண சபையில் போட்டியிட்டதனை போன்று 2011ம் ஆண்டு மீண்டும் பிரதி அமைச்சர் ஆமீர் அலி ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் தவிசாளரை நோக்கிய வேட்பாளர் என அவருக்கு ஆசை வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும் கொடுத்து இறுதியில் இராஜதந்திர ரீதியில் அவரை ஏமாற்றி தோல்வியடைய செய்து நடுக்கடலில் விட்ட சம்பவம் ஷிஹாப்தீனின் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத வடுவாக இருந்து வருகின்றது.
ஒரு சிறந்த ஆளுமைமிக்க கல்குடாவின் கல்விமானாக இருக்கின்ற ஷிஹாப்தீனை மனிதர்கள் கைவிட்டாலும் படைத்த இறைவன் கைவிடமாட்டான் என்ற அடிப்படையில் முன்னாள் முதலமைச்சராக இருந்த சிவனேசதுறை சந்தரகாந்தனின் (பிள்ளையான்) முயற்சியினால் கோறளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச சபைக்கு 2012ம் ஆண்டு செயலாளராக ஷிஹாப்தீன் பதவியில் அமர்த்தப்படுகின்றார்.
வரலாற்றில் வாழைச்சேனை பிரதேச சபையில் இது வரைக்கும் முஸ்லிம் செயலாளர் ஒருவர் கடமையாற்றிராத நிலையில் தொடர்ந்து ஏழு வருடங்கள் ஷிஹாப்தீன் குறித்த பிரதேச சபையில் செயலாளராக கடமையாற்றி தமிழ் சமூகத்தின் மனங்களை வென்றிருப்பதானது அவருடைய சமநிலையான நிருவாக திறமையினை வெளிச்சம் போட்டுக்காட்டும் விடயமாக உள்ளது.
அது மட்டுமல்லாமல் நட்டத்திலும், மேலதீக வங்கி கடனிலும் இயங்கிய பிரதேச சபையினை கோடிக்கணக்கில் இலாபமீட்டும் பிரதேச சபையாக மாற்றி அமைத்த பெறுமையும் அவருடைய ஏழு வருட நிருவாகத்தின் கீழ் நிகழ்ந்த விடயமாக காணப்படுகின்றது. அத்தோடு அவருடைய நிருவாக காலத்தில் மொத்தமாக 88 ஊழியர்களுக்கு நிரந்தர மற்றும் தற்காலிக வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அல்பத்தாவும், சமூக ஆர்வலர் சாட்டோ மன்சூரும் உரையாற்றினார்கள்.
மேலும் குறித்த பிரியாவிடை வைபவத்தில் வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஷிஹாப்தீன் என்பவர் யார்.? என்பதனை தெளிவாக தெறிந்து கொள்ளும் பொருட்டு நிகழ்வில் இடம் பெற்ற விடயங்களினுடைய சுருக்கமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பிரியாவிடை வைபவத்தில் வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஷிஹாப்தீன் என்பவர் யார்.? என்பதனை தெளிவாக தெறிந்து கொள்ளும் பொருட்டு நிகழ்வில் இடம் பெற்ற விடயங்களினுடைய சுருக்கமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.