பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.டபள்யு.எம்.ஜெஸீல்-
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு பெற்றது.248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகி இன்று(21-12-2017)நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஐக்கிய தேசிய கட்சி,தமிழ் தேசிய கூட்டமைப்பு,என்.எப்.ஜி.ஜி உள்ளீட்ட சுயேட்சை கட்சிகளும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன.இங்கு அமைச்சர் தயாகமகே,பிரதி அமைச்சர்களாக பைஷல் காசிம்,எச்.எம்.எம்.ஹரீஸ்,பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளீட் கட்சிகளின் முக்கியஸ்தர்களும்,வேட்பாளர்களும் கலந்து கொண்டதை படங்களில் காணலாம்.
இதே வேளை 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகி 14ஆம் திகதி நண்பகலுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.














