உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்த வேண்டும்-சம்­பிக்க ரண­வக்க


ள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்த வேண்டும். ஒரு­சில கார­ணி­களை வைத்­து­க் கொண்டு தேர்­தலை பிற்­போட முயற்­சிக்­கக்­கூ­டாது என ஜாதிக ஹெல உறு­மை­யவின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

மக்­களின் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வதே அர­சாங்­கத்தின் நோக்­க­மாக இருக்­க­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்­து­வதில் ஏற்­பட்­டுள்ள தடை­கள் குறித்து ஆளும் எதிர்க்­கட்­சி­யினர் கருத்­துக்­களை முன்­வைத்து வரும் நிலையில் தேர்தல் குறித்து நேற்று விடுத்­துள்ள அறிக்­கையிலேயே அவர் இதனைக் குறிப்­பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் முறை­யாக நடத்­தப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்தே அர­சாங்கம் செயற்­பட்டு வந்­தது. உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் குறித்து நாளை (27ஆம் திகதி) அறி­வித்தல் ஒன்றை விடுக்­கவும் ஜன­வரி மாதம் 25 ஆம் திக­திக்கு பின்னர் தேர்­தலை நடத்­தவும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் தயா­ராக இருந்த நிலையில் தற்­போது நீதி­மன்றம் வரையில் சென்­றுள்ள சில சிக்­கல்­களை அடுத்து தேர்தல் நடத்­து­வதில் தடை­களும் ஏற்­பட்­டுள்­ளன.

இதனை அடிப்­ப­டை­யாக வைத்து வழ­மை­போ­லவே எதிர்க்­கட்­சிகள் அர­சாங்­கத்தை குறை­கூற ஆரம்­பித்­துள்­ளன. திட்­ட­மிட்டே அர­சாங்கம் தேர்­தலை பிற்­போட்டு வரு­வ­தாக கூறு­கின்­றனர். அர­சாங்கம் ஒரு­போதும் தேர்­தலை திட்­ட­மிட்டு பிற்­போட தயா­ராக இல்லை. மக்­களின் ஜன­நா­யகம், உரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்டும், அதை நாம் முழு­மை­யாக ஏற்­று­கொண்டுள்ளோம்.

எனினும் முன்­னைய ஆட்சிக் காலத்தில் தேர்தல் முறைமை மாற்­றப்­பட்­டது. எல்லை நிர்­ணய முறை­மை­களில் நில­விய சிக்­கல்கள் மிகவும் மோச­மான வகையில் அமைந்­தது. நாம் ஆட்­சிக்கு வந்­த­வுடன் எல்லை நிர்­ணயம் குறித்து சரி­யான முறை­மை­யினை கையாள வேண்டும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

மக்கள் பாதிக்­கப்­ப­டாத வகையில் எல்லை நிர்­ண­யங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். மக்கள் பிர­தி­நி­திகள் சரி­யாக பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதற்­கா­கவே நாம் காலத்தை பெற்­றுக்­கொண்டு பிரச்­சி­னை­களை தீர்க்கும் நட­வ­டிக்­கை­களை கையாண்டு வரு­கின்றோம். இன்று இலங்கை பொரு­ளா­தார ரீதி­யிலும், அர­சியல் ரீதி­யிலும் பின்­ன­டைவை சந்­தித்து வரு­கின்­றது.

 ஆகவே நாட்டின் பொரு­ளா­த­ரத்தை சரி­யாக நிலை­நி­றுத்­தவும், அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்­தவும் சரி­யான வேலைத்­திட்­டங்கள் அவ­சியம். அவ­ச­ர­மாக தேர்­தல்­களை நடத்தி நாட்­டினை சிதை­வ­டைய இட­ம­ளிக்க முடி­யாது. புதிய தேர்தல் முறை­மைக்கு அமைய பிர­தேச சபை­க­ளுக்கு உரிய சரி­யான தலை­மைத்­துவம் கிடைப்­ப­தை­ய­டுத்து நாட்­டினை பலப்­ப­டுத்த முடியும். எந்தக் காரணம் கொண்டும் தேர்தலை பிற்போட நாம் தயாராக இல்லை.

ஜாதிக ஹெல உறுமையவின் நிலைப்பாட்டினை நாம் அரசாங்கத்தில் தெரிவித்துள்ளோம். உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே நாமும் அரசாங்கத்தை நடத்தி வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -