அறிவித்தலின்றி இஸ்ரேலுடன் தொடர்பு வைத்த காரணத்தால் வெளிவிவகார அமைச்சர் இராஜினாமா?

பிரிட்டனின் வெளியுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரீத்தி படேல், ராஜினாமா செய்துள்ளார்.
பிரிட்டனின் பிரதமர் தெரசா மேயிற்கு தனது இராஜினாமா தொடர்பில் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

விடுமுறை கால பயணமொன்றை மேற்கொண்டு இவர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். அங்கு, அந்நாட்டு பிரதமர் உட்பட, பல தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளார். இதனை அவர் நாட்டிற்கு முன்கூட்டியே அறிவித்திருக்க வில்லையென குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு, பிரிட்டனில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, பிரீத்தியை, ராஜினாமா செய்யுமாறு வலியுறுள்ளன. இதனையடுத்தே, அமைச்சர் பதவியை பிரீத்தி ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தனது இராஜினாமா தொடர்பில், பிரதமர் தெரசா மேக்கு அனுப்பியள்ள கடிதத்தில், ‘என் நடவடிக்கைகளால், அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக, மன்னிப்பு கேட்கிறேன். தவறுக்கு பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என கூறியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -