ஏ.எஸ்.எம்.ஜாவித்-
மாகாண சபைகள் மற்றும் உள்ள10ராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை மாகாண சபைகள் மற்றும் உள்ள10ராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று (21) அவரது அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் டிசம்பர் மாதம் கலைக்கப்பட்டுள்ள சகல உள்ள10ராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை அரசாங்கம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்யவுள்ளதாகவும் மாகாண சபைத் தேர்தல்களை அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் தேர்தல் சட்ட மூலதலத்தை அமுல்படுத்த முடியாது என்று பலர் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர் எதிரணியினர் கூச்சலிட்டனர் எனினும் அமோக வெற்றியுடன் இச்சட்டம் நேற்று பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் தமிழ் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தொண்டமானின் தொழிலாளர் காங்கிரஸ், மனோ கணேசனின் கூட்டுக்கட்சிகள் என்பன தமது முழு ஆதரவுகளையும் தந்து தேர்தல் சட்ட மூலம் வெற்றிபெற தமக்கு உதவியதாகவும் எதிராக 41 வாக்குளே அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்த அமைச்சர் இந்த அரசை இலகுவில் தோற்கடிக்க முடியாதவாறு ஆட்சிக் காலம் வரை ஆட்சியில் இருக்க நேற்று கொண்டு வரப்பட்ட சட்ட மூலத்திற்கு கிடைத்த ஆதரவில் இருந்து நிருபணமாகியுள்ளதாகவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இதன்போது தேர்தல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அமைச்சர் பதிலளித்தார். அமைச்சருடன் முன்னாள் அமைச்சர் அதாவுட செனிவிரத்னவும் கலந்து கொண்டு தேர்தல்கள் தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்தார்.