ரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலைபோன்று எதிர்காலத்தில் எங்களுக்கும் ஏற்படகூடிய சாத்தியக்கூறுகள்

இரண்டாவது தொடர்.......

ரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலைபோன்று எதிர்காலத்தில் எங்களுக்கும் ஏற்படகூடிய சாத்தியக்கூறுகள்.

அதன் பிரதிபலிப்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் மியன்மாரின் முஸ்லிம் விரோத இயக்கமான 969 என்னும் இயக்கத்தின் தலைவர் அசின் விராது தேரோ இலங்கைக்கு அழைக்கப்பட்டு அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

969 இயக்கமானது மியன்மாரில் முஸ்லிம்களை அழித்தொழிக்கும் நோக்கில் சுமார் 7௦௦௦ பௌத்த துறவிகளையும், ஆறு இலட்சம் தொண்டர்களையும் கொண்டுள்ள ஒரு பாரிய இயக்கமாகும். இதன் தலைவரை ஒரு பயங்கரவாதியாகவே நியூயோக்கிலிருந்து வெளிவருகின்ற டைம்ஸ் சஞ்சிகை குறிப்பிட்டிருந்தது.

அப்படிப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான அசின் விராது தேரோவுக்கு அன்றைய மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமானது, அரச விசேட பிரமுகர்களுக்கு வழங்கப்படும் வீ.ஐ.பி களுக்கான பி.எஸ்.டீ பாதுகாப்பு வழங்கி இருந்தது.

அத்துடன் அவர் கலந்துகொண்ட நிகழ்வுகள் அரச நிகழ்வு போன்றே காட்சியளித்தது. இறுதியில் நாட்டைவிட்டு செல்லும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இது சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.

மியன்மாரில் பல்லாயிரம் முஸ்லிம்களின் கொலைகளுக்கு உடந்தையான அசின் விராது தேரோவின் வருகைக்கு இலங்கை முஸ்லிம்கள் பாரிய எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். அப்படியிருந்தும் இந்நாட்டு முஸ்லிம்களின் உணர்வுகளை மதியாது அரச அனுசரணையுடன் பொதுபல சேனா இயக்கத்தினர்களினால் வரவழைக்கப்பட்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொண்டிருந்தார்.

28.09.2014 ஆம் திகதி நாட்டின் அனைத்து பிரதேசத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 5௦௦௦ சிங்கள பௌத்த பிக்குகள், கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஒன்று கூட்டப்பட்டு மகாநாடு என்ற போர்வையில், முஸ்லிம்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள சிங்கள இளைஞ்சர்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் விதத்தில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டது.

அத்துடன் பொதுபலசேனா அமைப்புக்கும் 969 இயக்கத்துக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது. அதில் ஆசிய பிராந்தியத்தில் ‘தீவிரவாதத்தை அழித்து அமைதியை நிலைநாட்டுவது’ என்பது அந்த உடன்படிக்கையின் சாராம்சமாகும். இது முஸ்லிம்களுக்கு அச்சத்தினையும், சந்தேகத்தினையும் ஏற்படுத்தி இருந்தது.

969 இயக்கத்தின் சார்பில் அசின் விராது தேரோவும், பொதுபலசேனா இயக்கத்தின் சார்பில் ஞானசார தேரரும் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தார்கள்.

இங்கே தீவிரவாதத்தினை அழித்தல் என்பது முஸ்லிம்களை அழிப்பது என்பதாக பொருள்படும். ஏனெனில் முஸ்லிம்களை இவர்கள் தீவிரவாதிகள் என்ரே அழைக்கின்றார்கள். இது முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ் வில்லியம் புஸ் அவர்களின் கொள்கையினை தழுவியதாகவே கருதப்படுகின்றது.

தொடரும்.....................

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -