க.கிஷாந்தன்-
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் 2350 என்.சி. எனும் போதை பொருள் டின்களுடன் 19.09.2017 அன்று மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கடந்த காலங்களில் பொகவந்தலாவ பகுதியில் என்.சி போதை பொருட்கள் விற்பனை செய்தி வருவதாக பெற்நோர்கள் கடந்த காலங்களில் குற்றம் சுமத்தி வந்தனர்.
இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து பொகவந்தலாவ பொலிஸார் இந்த சுற்றி வளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சுற்றி வளைப்பின் போது விற்பனைக்காக தம்வசம் வைக்கப்பட்டிருந்த என்.சி.டின்களை மீட்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர் விசாரணையின் பின் அட்டன் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சுற்றிவளைப்பை அட்டன் பொலிஸ் அதிகாரியின் வழிகாட்டலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.