நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
விற்பனைக்காக கேரள கஞ்சா ஒருத்தொகையுன் போதை மாத்திரைகள் வைத்திருந்த ஒருவரை ஹட்டன் கலால் திணைக்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஹட்டன் பிரதேசத்தில் போதை பொருள் விற்பனை செய்பவர் சந்தேகிக்கப்படும் மேற்படி நபரிடம் பொதி செய்யப்பட்ட 15 கேரள கஞ்சா பக்கட்டுகளுன் போதை மாத்திரைகள் ஒருத்தொகையும்
ஹட்டன் நகரில் 17.08.2017 மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டதாவும் சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து 18.08.2017 ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.