க.கிஷாந்தன்-
முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி வீட்டின் கூரை மீது விழுந்ததில் பெண் ஒருவர் படுங்காயம்பட்டு டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அட்டன் நகரத்திலிருந்து அட்டன் காமினிபுர பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி காமினிபுர பிரதேச நுழைவாயில் சுமார் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து 09.07.2017 அன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த 56 வயதுடைய பெண் ஒருவர் படுங்காயம்பட்டு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
எனினும் சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என்பதோடு, விபத்தில் வீட்டிற்கும் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து குறித்து அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


