மூன்று வாகனம் விபத்து - மூவர் காயம்



க.கிஷாந்தன்-

லவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் சென்.அன்றூஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற கார் மற்றும் வேனும் அட்டனிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற காருமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 09.07.2017 அன்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற கார் குறித்த வேனை முந்தி செல்ல முற்பட்டபோது எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகமே இவ்விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.

இவ்விபத்தினால் சுமார் ஒரு மணித்தியாலம் இவ்வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -