திருகோணமலை மாவட்ட வேலையில்லாப்பட்டதாரிகளுடன் கலந்துறையாடல்..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மாவட்ட வேலையில்லாப்பட்டதாரிகளை நேற்று (30) இரவு 7.30 மணியளவில் பாராளமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் ஆலோசகருமான விரிவுரையாளர் ஆசு மாரசிங்க சந்தித்து கலந்துறையாடினார்கள்.

வேலையில்லாப்பட்டதாரிகள் ஆசிரியர் தொழிலை மட்டும் எதிர்பார்க்கவில்லை. அரசாங்கத்தில் ஏதாவது தகுதிக்கேற்ற தொழில் வாய்ப்பினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும் பிரதமரின் ஆலோசகர் தங்களுக்கு 02 மாத அவசாகம் வழங்குமாறும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்று தகவல்களை திரட்டி சிறந்த பயிற்சிகளுடன் கூடிய தொழில் வாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறியதையடுத்து தமக்கு எழுத்து மூலமோ அல்லது அரச வர்த்தமாணி மூலமோ அல்லது ஊடகங்கள் மூலமோ சிறந்த தீர்வினை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும் சிறந்த தீர்வு கிடைக்காத பட்ஷத்தில் தொடர்ந்தும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் தெரிவித்தனர்.

இக்கலந்துறையாடலில் திருகோணமலை மாவட்ட பாராள மன்ற உறுப்பினர் இம்றான்மஹ்ரூப் .பாராளமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் மற்றும் புத்தள மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த என பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக கடந்த 24ம் திகதி கோடிஸ்வரனினால் பாராளமன்றத்தில் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -