ஹஸன் அலியின் இரண்டாவது படையெடுப்பு பொத்துவிலில் நாளை இடம்பெறும்

எஸ்.அஷ்ரப்கான்-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹசன் அலி கலந்து கொள்ளும் 2 வது மாபெரும் பொதுக் கூட்டம் நாளை ( 10.03.2017) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் பொத்துவில் "மைலன்" பழைய தியேட்டருக்கு முன்னால் நடைபெறவுள்ளது.

பொத்துவில் பிரதேச சபை முன்னாள் உதவித் தவிசாளர் ஏ.எம்.எம். தாஜுதீன் தலைமையில் நடைபெறும் இப்பொதுக் கூட்டத்தில், மு.கா.வின் உயர் பீட உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம். அன்ஸில் (அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர்), எம்.ஏ.எம். தாஹிர் (நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர்) ஆகியோர்கள் உட்பட உயர் பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளார்கள்.

இக் கூட்டத்தில் மு.கா.வின் தற்போதைய நிலை பற்றிய விளக்கம் அளிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -