முதலமைச்சருக்கு எதிராக போராட்டம் நடாத்தும் இறைச்சிக்கடை உரிமையாளர்கள்

த்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாத்நாத், ஆடு மற்றும் கோழிகளை வெட்டும் இறைச்சிக் கூடங்களை மூட உத்தரவிட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் இறைச்சிக் கடைக்காரர்கள், போராட்டத்தில் குதித்துள்ளனர். உத்தரப் பிரதேச புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத், சட்டவிரோதமாக மாடுகளை வெட்டும் இடங்களை மூடுவதற்கு, ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். 

மேலும் அரசாங்கத்தின் அனுமதி பெறாத ஆடு, கோழி வெட்டும் இறைச்சிக் கூடங்களையும் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பல இடங்களில் அனுமதி பெறாமல் செயற்பட்டு வந்த இறைச்சிக் கூடங்கள் அனைத்தையும், மூட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் இறைச்சிக் கடைக்காரர்கள், போராட்டத்தில் குதித்துள்ளனர். 

வௌ்ளிக்கிழமை (24) மாலை, சில பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்பட்டன. நேற்று (25), முழுமையாக மூடப்பட்டன. இந்தப் போராட்டம், கால வரையின்றி தொடரும் என்று போராட்ட அமைப்பினர் அறிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் கோழி, இறைச்சி, மீன், முட்டைக் கடைகள் மூடப்பட்டன. இது மட்டும் அல்ல, அசைவ ஹொட்டல்களும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. தற்போது, எருமை மாடுகளை வெட்டும் கூடங்களும் மூடப்பட்டுள்ளன. 

மேலும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மிருக காட்சி சாலைகளில் உள்ள சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு, எருமை மாட்டு இறைச்சியை விலைக்கு வாங்கி இரையாக போடுவது வழக்கம். ஆனால், இப்போது எருமை மாட்டின் இறைச்சி கிடைக்காததால், அவற்றுக்கு உணவு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே முதலமைச்சர் ஆதித்யநாத், அனுமதிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்கள் செயல்படுவதில் எந்த தடையும் இல்லை. எனவே, அவர்கள் தொடர்ந்து செயல்படலாம் என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -