தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சினால் நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடக செயலமர்வு நடைபெற்றுவருகின்றது.
வவுனியா மாவட்டத்திலுள்ள 04 பாடசாலைகளை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நேற்று (01/03/2017) புதன்கிழமை வ/வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இவ் ஊடக செயலமர்விற்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிரபல ஊடகவியாளர்களான சீத்தாராமன் மற்றும் அகமட். எம். நஷீர் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஊடக செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரிகள், மாவட்ட உதவிப் பணிப்பாளர், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
பாடசாலை மாணவர்களுக்கு ஊடகத்துறை சார்ந்த அடிப்படை அறிவை ஏற்படுத்துமுகமாக இவ் செயலமர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -