கொழும்பு தனியார் கடைத்தொகுதி தீப்பற்றி எரிந்தது (படங்கள்)



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெருவை அண்மித்த பிரின்ஸ் வீதியில் அமைந்துள்ள தனியார் கடைத்தொகுதி ஒன்று இன்று (18) நண்பகல் தீப்பற்றி எரிந்துள்ளது.

பல்வேறுபட்ட பொருட்களைக் கொண்ட கடைத் தொகுதியின் 5வது மாடியில் உள்ள கடைகளே இவ்வாறு தீயினால் எரிந்துள்ளது. தீப்பற்றியவுடன் தீயணைப்புப் படையினருக்கு அறிவித்து அவர்கள் உடநடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ ஏற்பட்டதன் காரணமாக பல கடைகள் மூடப்பட்டதுடன் அங்காடி வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் தீ ஏற்பட்டதற்கான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மின் ஒழுக்கு காரணமாக இத்தீ ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடைத் தொகுதியில் பாரியளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -