மூதூர் ஆனைச்சேனை பிரதேசத்தில். மத்திய காரியாலயம் அமைத்து மூதூர் தோப்பூர் மக்களின் அபிளாசையின் பெரிதும் பங்காற்றி வரும் நௌபாள்டீன் நற்பணி மன்றம். இன்று 69 வது சுதந்திர தின நிகழ்வில். மூதூர் வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக. நோயாளிகளுக்கு காலை உணவை ஏற்பாடு செய்திருந்தது. அந்த வகையில் 150 க்கும் மேற்பட்ட நோயாளிகள் காலை ஆகாரம் வழங்கப்பட்டது.
பின்னர் இன்று காலை 8:20 மணியளவில் தேசிய கொடி மற்றும் மன்றக் கொடிகளை காரியாலய முந்தலில் ஏற்றி நிகழ்வுகள் ஆரம்பமாகின.
*தலைவர் M.I. நௌபாள்டீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வை மன்றத்தின் செயலாளர் K.M.றக்கீப் தொகுத்து வழங்கினார். தேசியக் கொடியை S.I. கபீபுல்லா ஏற்ற மன்றக் கொடி மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் M.I. நௌபாள்டீன் அவர்கள் ஏற்றி் வைத்தார்.
மும்மதங்களின் மதகுருக்கள், வைத்திய அதிகாரி, மூ.பொ.நி.பொறுப்பு அதிகாரி, அ.இ.ச.நீதவானும் முஸ்லிம் விவாக பதிவாளர் M.I.லாபீர் மற்றும் மன்றத்தின் உறுப்பினர்கள், இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் என நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆதில்.