கிழக்கில் முறையான அதிபர் இடமாற்றக் கொள்கை இல்லாததால் அதிபர்கள் பாதிப்பு..!

அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் முறையான அதிபர் இடமாற்றக் கொள்கை நடைமுறைப் படுத்தப் படாததால் சில அதிபர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வரப் பட்டுள்ளது. பொதுநல அமைப்புக்கள் சில இந்த முறைப்பாட்டை செய்துள்ளன.

சில அதிபர்கள் அடிக்கடி இடமாற்றப் படும் அதேவேளை சிலர் மிக நீண்ட காலமாக தங்களுக்கு வசதியான பாடசாலைகளில் கடமை புரிய அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் இந்த முறைப்பாட்டில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. 

கிண்ணியா கல்வி வலயத்தில் ஒரு அதிபர் ஒரே பாடசாலையில் தொடர்ந்து 22 வருடங்கள் கடமை புரிந்து வருகின்ற போதிலும் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இந்த விடயத்தை கண்டுகொள்ள வில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனவே முறையான அதிபர் இடமாற்றக் கொள்கை கிழக்கு மாகாணத்தில் அமுல் படுத்தப் படுவதை உறுதிப் படுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -