விலைமனுக்கோரலின்றி அரச கொடுக்கல் வாங்கல் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது எனக்கூறிக்கொண்டே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இருந்தபோதிலும் அரச சொத்துகளை விலைமனுக்கோரலின்றி தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அளகப் பெரும தெரிவித்தார்.
இந்நிலையில் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம், சம்பூர் அனல்மின் நிலையம் என்பவற்றை இந்தியாவுக்கும், திருகோணமலை எண்ணெய் குதத்தை அமெரிக்காவுக்கு வழங்குவதற்குமான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
எனவே அரசாங்கம் இவ்வாறாக சகல பொருளாதார கேந்திர நிலையங்களையும் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாயின் 2020 ஆம் ஆண்டில் பொலிஸ் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், நீதிமன்றம் போன்றனவே அரச நிறுவனங்களாக எஞ்யிருக்கும் என்றார்.
வீரகேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -