”குளிர்பானங்களை வழங்கும் முஸ்லிம் காங்கிரஸ்”

பாறுக் ஷிஹான்-

மீள்குடியேற்ற விசேட நடமாடும் சேவைக்கு வந்துள்ள மக்களின் தேவையை கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் யாழ் மாவட்ட அமைப்பாளர் ரொசான் தமீம் தலைமையில் குளிர்பானம் வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இச்சேவைக்கு தூர இடங்களில் இருந்து வந்த மக்கள் அனைவருக்கும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.இந்நடமாடும் சேவையில் பல மாவட்டங்களில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் நடமாடும் சேவையில் கலந்து கொண்ட மக்களுக்கு மதிய போசன ஒழுங்குகளை யாழ் முஸ்லீம் சிவில் அமைப்பினர் ஒழுங்கு செய்துள்ளனர். இது தவிர இச்சேவைக்கு வரும் மக்களிற்கு யாழில் ஏற்கனவே மீள்குடியேறியுள்ள மக்கள் தனிப்பட்ட முறையிலும் விருந்தோம்பல்களை முன்னெடுத்துள்ளனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -