பாறுக் ஷிஹான்-
மீள்குடியேற்ற விசேட நடமாடும் சேவைக்கு வந்துள்ள மக்களின் தேவையை கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் யாழ் மாவட்ட அமைப்பாளர் ரொசான் தமீம் தலைமையில் குளிர்பானம் வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இச்சேவைக்கு தூர இடங்களில் இருந்து வந்த மக்கள் அனைவருக்கும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.இந்நடமாடும் சேவையில் பல மாவட்டங்களில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் நடமாடும் சேவையில் கலந்து கொண்ட மக்களுக்கு மதிய போசன ஒழுங்குகளை யாழ் முஸ்லீம் சிவில் அமைப்பினர் ஒழுங்கு செய்துள்ளனர். இது தவிர இச்சேவைக்கு வரும் மக்களிற்கு யாழில் ஏற்கனவே மீள்குடியேறியுள்ள மக்கள் தனிப்பட்ட முறையிலும் விருந்தோம்பல்களை முன்னெடுத்துள்ளனர்.