செலிங்கோ நிறுவனத்தில் வைப்பு செய்தவர்களின் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய எட்டாவது சந்தேக நபர் யஸ்மின் இல்ஹாம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் நாட்டிலிருந்து தப்பி சென்றிருந்த நிலையில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு பயணம் தடை செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் ஐக்கிய அரபு இராஜ்ய அபுதாபி சென்றிருந்ததாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரின் கடவுச்சீட்டை தடை செய்த கொழும்பு பிரதான நீதவான் 50,000 ரூபாய் பிணையிலும் 50 இலட்சம் பெறுமதியான 4 சரீர பிணையிலும் சந்தேகநபரை விடுவிக்க உத்தரவளித்தார்.