அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை அவர்கள் ஓர் அமைச்சர் போல் தனது சேவையை வழங்கினார் - ஷிப்லி பாறூக் MPC

M.T. ஹைதர் அலி-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் பூரண அனுசரணையில் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கினால் நாடத்தப்பட்ட அஷ் ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெப்பை ஞாபகார்த்த A பிரிவு கழகங்களுக்கிடையிலான 2016ஆம் ஆண்டுக்கான நொக்அவுட் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் 24.04.2016ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்...

இந்த தொடரை நடாத்துவதற்கு என்னிடம் அனுசரணை கேட்ட சகோதரர்கள் இத்தொடரை எனது பெயரிலோ அல்லது எனது குடும்பத்தவர்களின் பெயரிலோ நடத்துவதற்கு என்னிடம் அனுமதி கேட்டனர் இருப்பினும் எமது ஊருக்காக பல்வேறு சேவைகளையும், தியாகங்களையும் செய்து பயங்கரவாதம் எமது பகுதியில் உச்சகட்டத்தில் இருந்த காலப்பகுதிகளில் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சர் போன்று எமது ஊரை கட்டிக்காத்து இவ்வூருக்காகவே தனது உயிரையும் தியாகம் செய்த மாமனிதர்.

அஷ் ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெப்பை அவர்களையும் அவர்களின் அளப்பரிய சேவைகளையும் நினைவுபடுத்தும் வகையில் அவர்களின் பெயரில் நடாத்தப்படுவதே பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே இத்தொடர் இரண்டாவது முறையாகவும் அஷ் ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெப்பை அவர்களின் பெயரில் சிறப்பாக நாடாத்தி முடிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். 

எமது ஊரை பொறுத்தவரையில் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் வெறுமெனே பொழுதுபோக்கிற்காக மாத்திரம் விளையாடப்படுகின்ற ஒரு விளையாட்டாக மாறி வருகின்றது. அந்த நிலைமை மாற வேண்டும் இங்கே பல திறமையான வீரர்கள் உள்ளனர். 

இத்தகைய வீரர்கள் இவ்வாறான உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளோடு மாத்திரம் நின்றுவிடாமல் மாவட்ட மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி எமது ஊருக்கு பெருமை சேர்க்க வேண்டும். இருப்பினும் பல திறமையான வீரர்கள் தொடர்ந்தும் விளையாடி தமது திறமைகளை வெளிக்காட்ட அவர்களின் குடும்ப பொருளாதார நிலை அவர்களுக்கு தடையாக அமைகின்றது.

எனவே இதற்காக நாம் ஒரு திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். அதாவது இவ்வாறன இளைஞர்களுக்கு அரசு ஊடாக அல்லது தனியார் துறை ஊடாக நிரந்தர தொழில் ஒன்றை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு அவர்களின் திறமைகளை வளர்பதற்கும் சந்தர்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க முடியும். 

அதேபோன்று எமது ஊரில் உள்ள ஒரே ஒரு பொது மைதானமான காத்தான்குடி பொது மைதானம் தற்போது விளையாடுவதற்கு முடியாத அளவிற்கு மோசமான ஒரு நிலையில் காணப்படுகின்றது. எனவே அந்த மைதானத்தை புனரமைப்பதற்காக வேண்டி கௌரவ விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களிடம் கேட்ட போது அதற்காக 20 லட்சம் ரூபா நிதியினை ஒதுக்கி வழங்கியிருக்கின்றார்.

எனவே மிக விரைவில் மைதானத்தை புனரமைத்து அதனை எமது இளைஞர்கள் விளையாடுவதற்காக வழங்கவிருக்கின்றோம். அது மட்டுமல்லாமல் விரைவில் கௌரவ விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களை அழைத்து வந்து விளையாட்டுச் சுற்றுப்போட்டி ஒன்றையும் நடாத்தவிருக்கின்றோம். 

தற்போது மிகவும் ஒரு உஷ்ணமான காலநிலை நிலவுவதால் ஒரு பொருத்தமான சந்தர்பத்தில் அந்த விளையாட்டுப் போட்டித் தொடரை நடாத்த திட்டமிட்டிருக்கின்றோம். அதன் மூலம் எமது வீரர்கள் நேரடியாக பிரதி அமைச்சரை சந்தித்து எங்களுடைய விளையாட்டு துறை சார்ந்த தேவைகளை அவரிடம் எடுத்துக்கூறி விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் என்ற வகையில் அவரால் எமது ஊருக்கு என்னென்ன சேவைகளை செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் பெற்றுக்கொடுக்க தயாராகவுள்ளோம் என்று தெரிவித்தார். 








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -