விபத்து : மூவர் காயம் - சாரதி கைது

க.கிஷாந்தன்-
பாமஸ்டன் பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று ரதல்ல கிளேன்டன் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் மூவர் சிறு காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து 18.04.2016 அன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த முச்சக்கரவண்டி வீதியில் செல்லும் போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதி ஓரத்தில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் சாரதியை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -