இராணுவ ஆட்ச்சிக்கு தயாராகிறாரா பசில் ராஜபக்ச - வெளியான இரகசியம்

லங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள பசில் ராஜபக்சவின் இல்லத்தில், புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் இந்தச் சந்திப்பு நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, இலங்கை இராணுவத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர், பசில் ராஜபக்சவுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக அரசாங்கத்தின் உயர் மட்ட உறுப்பினர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசில் ராஜபக்சவுடன் அந்த அதிகாரி நீண்ட தொலைபேசி உரையாடல்களை மேற்கொள்வதும் கண்டறியப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்சவுடன் நெருக்கமான தொடர்பை வைத்துள்ள இராணுவ அதிகாரியே, இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகளுடனான சந்திப்புக்கு ஏற்பாடுகளை செய்திருப்பதாக அரசி்யல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை இராணுவத்தில் உள்ளவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை, இலங்கையின் இராணுவச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -