மாற்றுத்திரனாளிகளுக்கு அரசாங்க கொடுப்பனவுகளுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கி வைப்பு...!

அப்துல் அஸீஸ்-
மாற்றுத்திரனாளிகளுக்கான மருத்துவ முகாமும், அரசாங்க கொடுப்பனவுகளுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று (09) கல்முனை கிரீன் பீல்ட் முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது.

கல்முனை திறந்த சாரணிய அமைப்பு மற்றும் கல்முனை மக்கள் மன்றம் ஆகியவற்றின் அனுசரனையுடன் வலது குறைந்தோர் மறுமலர்ச்சி சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந் நிகழ்வில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாற்றுத்திரனாளிகள் கலந்துகொண்டு நன்மையடையலாயினர்.

கல்விக்கல்லூரி முன்னால் விரிவுரையாளரும், மாவட்ட சாரணிய அமைப்பின் முன்னால் ஆணையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபாவின் ஒருங்கிணைப்பில், அஸ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எ.எல்.எப்.ரஹ்மானினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த மருத்துவ முகாமில் வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -