S.சஜீத்-
காத்தான்குடி பிரதான வீதி அன்நாஸர் பாடசாலை முன்பாக (09.04.2016) இன்று சுமார் 02.20 மணியளவில் மஞ்சள் கடவையில் பாதசாரிகள் பயணிப்பதற்கு முற்பட்ட போது பிரதான வீதி ஊடாக பயணித்து வந்த வாகனம் நிறுத்தப்பட்டபோது பின்னால் வந்து கொண்டிருந்த வாகன சாரதிகளின் கவனயீனமாக ஒன்றன்பின் ஒன்றாக மோதி மூன்று வாகனங்கள் இதன்போது விபத்துக்குள்ளாகின.
இவ்விபத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. குறித்த மூன்று வாகனங்களுமே சேதத்திற்குள்ளாகின என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னேடுத்து வருகின்றனர்.



