ஜப்பானின் குவாமோட்டோ நகருக்கு அருகே இரண்டு மிகக்கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மிகவும் சக்தி வாய்ந்த 7.1 மற்றும் 7.4 அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுனாமி எச்சரிக்கை அரியேகெ மற்றும் யட்ஸுஷிரோ கடல் பிரதேசங்களில் விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடல் நீரில் கடுமையான சுழற்சி இருக்கும் எனவும் ஜப்பானிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நேற்று ஏற்பட்ட அதிர்வுகளில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
கூடுதல் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
BBC
BBC