திருகோணமலை வெந்நீருற்று பகுதியை பராமரிக்க உப்புவெளி பிரதேச சபையிடம் கையளிக்க தீர்மானம்..!

எப்.முபாரக்-
திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியை ஏற்கெனவே பராமரித்துவந்த உப்புவெளி பிரதேச சபையிடம் மீளவும் கையளிக்க வேண்டுமென்று விடுத்த கோரிக்கைக்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார இணக்கம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (29) நடைபெற்றபோது, கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியை மீளவும் உப்புவெளி பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன்; பிரேரணையை முன்வைத்து கோரிக்கை விடுத்தார்.

2017ஆம் ஆண்டு முதல் உப்புவெளி பிரதேச சபையிடம் கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதிக்கான பராமரிப்பையும் வருமானத்தையும் வழங்கவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தன் தெரிவிக்கையில், 'பல வருடங்களாக கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியை பராமரித்து வருமானம் பெற்றுவந்த உப்புவெளி பிரதேச சபையிடமிருந்து இந்த உரிமையை தொல்பொருள் திணைக்களம் தன்வசம் பெற்றுக்கொண்டது. தற்போதைய நல்லாட்சியில் இதனை மீளவும் உப்புவெளி பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டுமென கோரியமைக்கு அரசாங்க அதிபர் இணங்கியுள்ளார்' என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -