கஞ்சாவுடன் யாத்திரை சென்ற பிக்குகள் கைது..!


க.கிஷாந்தன்-
காவி உடை அணியாமல் சாதாரண உடையில் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்ட அநுராதபுரத்தை சேர்ந்த ஐந்து பௌத்த பிக்குகளை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அநுராதபுரம் சந்தலாங்காவ பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரைகளாக காவி உடை அணியாமல் சாதாரண உடையில் வந்த ஐந்து பௌத்த பிக்குகளில் ஒரு பிக்குயிடமிருந்து கஞ்சா போதைபொருள் பக்கட்கள் அட்டன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

16.02.2016 அன்று இரவு 11 மணியளவில் அட்டன் குடாகம பகுதியில் ரோந்து கடமையில் ஈடுப்பட்டிருந்த அட்டன் பொலிஸாரால் இந்த ஐந்து பேர் பயணித்த வாகனம் தீடிரென பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது இதில் ஒருவரிடமிருந்து கஞ்சா தொகை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த ஐந்து பேரையும் கைது செய்த அட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின் சம்மந்தப்பட்ட ஒரு பிக்குவை 17.02.2016 அன்று மதியம் அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் நான்கு பௌத்த பிக்குகள் குறித்து குறித்த விகாரையின் நாயக்க தேரர்க்கு அறிவித்ததன் பின் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -