அஹமட் இர்ஷாட் -
இலங்கைக்கு மூன்று விஜயம் செய்துள்ள பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் சரீஃப் இலங்கைக்கான பாக்கிஸ்தான் தூதரகத்தினால் 04.01.2016 மாலை ஹோட்டல் கலதாரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராபோசன விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுபினர்கள், இராஜதந்திரிகள், நாட்டிலுள்ள பிரபல முக்கிய வர்த்தகர்கள், உல்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் என பல நாட்டின் பல முக்கிய உயர்மட்ட புள்ளிகள் கலந்து கொண்டமையினை அவதானிக்க கூடியதாக இருந்தது.
ஏற்கனவே பிரதமர் நவாஸ் சரீஃப் உட்பட உயமட்ட தூதுக்குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் இன்று 05.01.2016 இடம்பெறவுள்ள இலங்கை- பாக்கிஸ்தான் பேச்சுவார்த்தையில் பத்து உடன்படிக்கைகள் கைசாத்திடப்படவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.






