திவுலபிடிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 7 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இன்று காலை குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மின்சாரத்துடன் இணைக்கப்பட்டிருந்த கையடக்கத்தொலைப்பேசி மின்னேற்றியின் மின்கம்பியை அந்த பெண்குழந்தை வாயால் கடித்துள்ள நிலையில் மின்சாரம் தாக்கி அக்குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையில் உடல் திவுலபிடிய மருத்துவமனையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக விசாரணையை வெயங்கொட காவற்துறை மேற்கொண்டுள்ளது.
இதனை அதிகம் பகிருங்கள் இன்னும் ஒரு குழந்தை பலியாகாமல் இருக்க...
