நுரைச்சோலை வீட்டுத்திட்டம் பற்றி கிழக்கு மாகாண சபையில் உதுமாலெப்பை MPC குறிப்பிட்டவை..!

சலீம் றமீஸ்-
ம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவூதி அரசாங்க நிதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வழங்குவதற்கான அவசர நடவடிக்கை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை

அம்பாறை மாவட்டத்தில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று , நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை பிரதேச மக்களுக்காக சவூதி அரசாங்கம் பல கோடி ரூபாய் நிதியில் சகல வசதியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபை அமர்வு அண்மையில் பிரதித்தவிசாளர் இந்திரக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

அம்பாரை மாவட்டத்தில் நீத்தை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை மக்களிடம் கையளிக்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரு.மெத்தானந்த சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரனை விவாதத்தில் உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.

இந்த தனிநபர் பிரேரனையில் 233 தீக்கவாப்பிய தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் என குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தவறானதாகும். தீக்கவாப்பிய கிராமம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசமாகும்.

நீத்தை நுரைச்சோலை எனும் கிராமத்தில் தான் இவ்வீடமைப்புத்திட்டம் சவூதி அரசின் நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இக்கிராமம் அக்கரைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசமாகும் என்பதை இச்சபைக்கும் இப்பிரேரனையை சமர்ப்பித்த மாகாண சபை உறுப்பினர் திரு.மெத்தானந்த சில்வாவுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

இவ்வாறான சரியான தகவல்கள் தெரிவிப்பதால் என்னை வேறு விதமாக யாரும் நினைத்து விட வேண்டாம். அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள தீக்கவாப்பிய கிராம மக்களுடன் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வருகின்றோம்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளை வழங்கும் விடயத்தினை சில இனவாதிகள் உயர் நீதிமன்றம் வரை கொண்டு சென்று காணிக் கச்சேரி வைத்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வீடுகளை வழங்குவதற்கான அறிவித்தல்கள் வழங்கப்படுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொரு வருடமும் தங்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடாத்தி வருகின்றனர்.

எனவே, இம்மக்களின் நன்மை கருதி தற்போது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள நல் சூழ்நிலையைப் பயன்படுத்தி கிழக்கு மாகாண சபை அவசர நடவடிக்கை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொண்டு இம்மக்களின் வீடுகளை கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -