சென்னை நுங்கம்பாக்கத்தில் 75 முதல் 100 பேர் தங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது, உதவிக்கு 7092020207 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கபாலி ரஜினி என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதே போன்று பலரும் உதவி செய்ய முன் வந்துள்ளனர். கடந்த மாதம் கொட்டித் தீர்த்த மழையால் படாதபாடு பட்ட சென்னை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் தற்போது நேற்று முன்தினம் இரவில் இருந்து பெய்த கனமழையால் மீண்டும் வெள்ளக்காடாகியுள்ளன.
சென்னையின் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர். இந்நிலையில் உதவி தேவைப்படுபவர்களுக்காக சிலர் ட்வீட் செய்துள்ளனர்.

