இராணுவத்தில் இருந்து தப்பிவந்த ஒருவர் அடையாள அட்டையின்றி நடமாடியதால் விளக்கமறியலில்..!

எப்.முபாரக்-
ராணுவத்திலிருந்து தப்பியோடி வந்த ஒருவர் திருகோணமலை மொறவெவ பகுதியில் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு வந்து சந்தேகத்துக்கு கிடமான முறையில் அடையாள அட்டைகள் இன்றி நடமாடிய ஒருவரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் புதன்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது. 

குறித்த சந்தேக நபர் இராணுவத்திலிருந்து அனுமதியின்றி தப்பியோடி வந்ததாகவும் மதுபானம் அருந்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும், மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் செவ்வாய் கிழமை(17) இரவு கைது செய்துள்ளதாகவும் சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர் படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டார். 

இச்சம்பவம் பற்றிய மேலதிக. விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -